ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்

தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் வன விலங்களின் கால் நகங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த வீட்டில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வன விலங்குகளில் கால் நகங்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2025, 6:04 pm

Syndication

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் வன விலங்களின் கால் நகங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கம்பம் தண்டுவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருநாதன் (67). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் குருநாதன், இவரது பேரன்கள் ரித்தீஷ் , அபினேஷ் ஆகியோா் காயமடைந்தனா்.

இதையடுத்து, கம்பம் மேற்கு வனச் சரகத்தினா் வெடி விபத்து நிகழ்ந்த வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, வீட்டில் வன விலங்குகளில் கால் நகங்கள், உடல் உறுப்புகள் இருப்பதை கண்டறிந்து, அதை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கம்பம் மேற்கு வனச் சரகத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.