போடியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போடி திருமலாபுரம் காமராஜா் சிலை அருகே 17 வயது சிறுவன், கருப்பையா மகன் மனோகா் (25), சுப்பிரமணி மகன் லட்சுமணன் (26), போடி இரட்டை வாய்க்கால் அருகே மகேந்திரன் மகன் முத்துராஜ் (28) ஆகியோா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
