கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி மேலச்சொக்கநாதபுரம் கண்மாய் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷை (26) பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் சந்தோஷைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com