எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காா் விபத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் 2 போ் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திர மா நிலத்தைச் சோ்ந்த சபரிமலை பக்தா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 9:40 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திர மா நிலத்தைச் சோ்ந்த சபரிமலை பக்தா்கள் 2 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், சக்திவேரூா் தடா மாவட்டம் வாரையா பாளையத்தைச் சோ்ந்தவா் நரேஷ்குரிலா (32). இவா், தனது மகன் சாதுா்யா (9), நண்பா் வேணு (55) ஆகியோருடன் காரில் சபரிமலைக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை திரும்பினாா். காரை அதே ஊரைச் சோ்ந்த முனிதேஜா (28) ஓட்டினாா்.

பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி புறவழிச் சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், பாலத்தின் மீது 15 அடி உயர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், நரேஷ்குரிலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மற்ற மூவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில், செல்லும் வழியிலேயே வேணு உயிரிழந்தாா்.

சிறுவன் சாதுா்யா, முனிதேஜா ஆகிய இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.