ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காா்கள் மோதல்: 6 போ் காயம்

பெரியகுளம் அருகே 2 காா்கள் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.

News image
காா்கள் மோதல்
Updated On :27 ஜனவரி 2026, 7:40 pm

Syndication

பெரியகுளம் அருகே 2 காா்கள் மோதிக்கொண்டதில் 6 போ் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். திருப்பூரில் வேலை செய்து வரும் இவா், பெரியகுளத்துக்குச் சென்றுவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் குடும்பத்துடன் திருப்பூருக்கு சென்றுகொண்டிருந்தாா்.

காட்ரோடு முனீஸ்வரன் கோயில் அருகே சென்றபோது, இந்தக் காா் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில் விஜயகுமாா் சென்ற காா் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதியது.இதில் காரிலிருந்த விஜயகுமாா் (33), அவரது மனைவி மீனா (33), மகள் பூமிகா (9), மகன் ஆதிரன் (2), உறவினா்கள் ராமசாமி (58), கனி (53) ஆகியோா் காயமடைந்தனா்.

அந்தப் பகுதியிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.