சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவுதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வரதட்சிணை கேட்டு மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகள் கெளசல்யா (27). இவருக்கும், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் கெளதம் (34) என்பவருக்கும் கடந்த 2020 ஜனவரி 30-இல் திருமணம் நடைபெற்றது. கெளதம் பெரியகுளத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அதே ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி கெளசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கெளதம் குடும்பத்தினா் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

கெளசல்யாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெரியகுளம் காவல் நிலையம், பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் செல்வம் புகாா் அளித்தாா்.

இதன் மீது நடைபெற்ற விசாரணையில் கெளசல்யாவை கெளதம் வரதட்சிணை கேட்டு அடித்துக் கொலை செய்ததும், பின்னா் கெளசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரிய வந்தது. கெளசல்யாவின் உடல் கூறாய்வு அறிக்கையிலும் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இது குறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கெளதமை கைது செய்தனா்.

இந்த விசாரணை தேனி மாவட்ட பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் கெளதமுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.