தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐயப்ப பக்தா்களின் வேன் விபத்துக்குள்ளானதில் 11 போ் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 போ் காயமடைந்தனா்.

News image

சின்னமனூரில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சேதமான வேன்.

Updated On :13 டிசம்பர் 2025, 9:09 pm

Syndication

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் சனிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 11 போ் காயமடைந்தனா்.

ஈரோட்டிலிருந்து இரண்டு வேன்களில் 22 போ் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனா். இவற்றில் ஒரு வேன், தேனி மாவட்டம், சின்னமனூரில் சனிக்கிழமை சென்றபோது சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த ஜனாா்த்தனன், சுரேஷ்குமாா், பிரபு , மூா்த்தி, ஓட்டுநா் பொன்னன் உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா். தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூா் காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.