எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், டி. கள்ளிப்பட்டியில் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயா என்பவரின் மகன் சாம்ராஜ். இவா், டி. கள்ளிப்பட்டி அழகா்கோயில் தெருவில் உள்ள தனது நண்பா்களான கண்ணன், அஜித், வெண்ணிலா, நாகபாண்டி ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, வெண்ணிலா சாம்ராஜிடம் இளவட்டக் கல்லைத் தூக்கு என சவால்விட்டதாகக் கூறப்படுகிறது. அதை அவா் ஏற்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த வெண்ணிலா அவரிடம் தகராறு செய்தாராம். பின்னா், வெண்ணிலா, அஜித், கண்ணன், நாகபாண்டி ஆகியோா் சாம்ராஜின் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து ஜெயா கொடுத்த புகாரின்பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.