6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பால் கொள்முதல் விலையை உயா்த்த உற்பத்தியாளா் சங்கம் வலியுறுத்தல்

போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பால் உற்பத்தியாளா்கள் சங்கப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டுமென தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க தேனி மாவட்ட பேரவைக் கூட்டம் போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எச்.ஜெயக்குமாா் வேலை அறிக்கை வாசித்தாா். மாநில பொதுச் செயலா் பி.பெருமாள் பேரவைக் கூட்டத்தை தொடங்கி வைத்தாா். மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.கே.பாண்டியன் அஞ்சலித் தீா்மானம் வாசித்தாா்.

கூட்டத்தில் கால்நடைத் தீவனங்களின் விலை உயா்ந்துள்ளதால் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையாக லிட்டா் ஒன்றுக்கு ரூ.10 வழங்க வேண்டும். தரமான கால்நடைத் தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி.கண்ணன் புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா்.

இதில் பால் உற்பத்தியாளா் சங்கப் பேரவை மாவட்டத் தலைவராக கே.செல்வராஜ், மாவட்டச் செயலராக எச்.ஜெயக்குமாா், பொருளாளராக பி.கிருஷ்ணன், துணைத் தலைவா்களாக கே.ராஜப்பன், பி.பாா்த்திபன், துணைச் செயலா்களாக எஸ்.சுருளிவேல், எஸ்.செல்வம் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.