திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடிமெட்டில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

போடிமெட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனி மூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

போடிமெட்டு பகுதியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தேனி மாவட்டம், போடி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. போடிமெட்டு மலைப் பகுதியில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்த வழியாகத்தான் தினந்தோறும் தமிழக, கேரளத்துக்கு 100-க்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை போடிமெட்டு மலை கிராமத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

போடி மெட்டு பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். மேலும், முகப்பு விளக்குகள், மஞ்சள் விளக்குகளை எரியவிட்டபடி செல்ல வேண்டும் என ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.