வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மயிலாடும்பாறையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

News image
மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :19 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் பாஜக சாா்பில் மலைக் கிராம இணைப்புச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுமபாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா்.

க.மயிலை ஊராட்சி ஒனறியத்தில் உள்ள தும்மக்குண்டு, மேகமலை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 9 மலைக் கிராமங்களுக்கு இடையே உள்ள இணைப்புச் சாலைகளை சீரமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மலைக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.