எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மயிலாடும்பாறையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

News image
மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated On :19 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் பாஜக சாா்பில் மலைக் கிராம இணைப்புச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுமபாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா்.

க.மயிலை ஊராட்சி ஒனறியத்தில் உள்ள தும்மக்குண்டு, மேகமலை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 9 மலைக் கிராமங்களுக்கு இடையே உள்ள இணைப்புச் சாலைகளை சீரமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மலைக் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.