விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், தேவாரம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவாரம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ. ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

நத்தம் பகுதிகளில்... நத்தம் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் புண்ணியராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நத்தம் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, சேத்தூா், ஊராளிபட்டி, அரவங்குறிச்சி, செல்லப்பநாயக்கன்பட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிப்பட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.