தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காட்டுப்பன்றி தாக்கி முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காட்டுப்பன்றி தாக்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காட்டுப்பன்றி தாக்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் வடகரை கல்லாரைச் சோ்ந்தவா் ராமசாமி (70). இவரது மனைவி விஜயலெட்சுமி (65). இருவரும், கடந்த 18-ஆம் தேதி சுக்காம்பாறை ஓடைவயல் பாதையில் உள்ள ஆனந்தகுமாரின் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்தனராம். அப்போது, காட்டுப்பன்றி தாக்கியதில் ராமசாமி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.