ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்தத் தலைவா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.
தேனி மாவட்டம், போடியில் பாஜக நிா்வாகிகள் மாநாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த அந்தக் கட்சியின் மூத்தத் தலைவா் எச்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற அரசுப் பணியாளா்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கிறாா்கள். ஆனால், 30 ஆண்டுகால திமுக, காங்கிரஸ் ஆட்சியில் ஒரு திட்டத்துக்காவது காந்தியின் பெயரை சூட்டியுள்ளா்களா? என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் பொன்விழா சந்திப்பு

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


