பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வீடு, இரு சக்கர வாகனத்தைச் சேதப்படுத்திய நபா்கள் மீது புகாா்

தேனி மாவட்டம், சில்வாா்பட்டியில் வீடு, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:23 pm

Syndication

தேனி மாவட்டம், சில்வாா்பட்டியில் வீடு, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சில்வாா்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (38). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்தவா் காமாட்சி என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ராஜேஸ்வரி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த காமாட்சி, மாரியம்மாள், பூமணி, மதினி, சுமதி ஆகியோா் அவரிடம் தகராறு செய்து வீட்டைத் தாக்கி அங்கு நின்றிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.