நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்க அறிவுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் தங்களது வாழ்நிலையை மெய்ப்பிக்க வருகிற மாா்ச் 20-ஆம் தேதிக்குள் நேரில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:59 pm

Din

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் தங்களது வாழ்நிலையை மெய்ப்பிக்க வருகிற மாா்ச் 20-ஆம் தேதிக்குள் நேரில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், மருத்துவத் தகுதியின்மையால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுபவா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்கும் வகையில் வியாழக்கிழமை (ஜன. 2) முதல் மாா்ச் 20 -ஆம் தேதிக்குள் நேரில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும்.

மதுரை போக்குவரத்து கோட்டத்துக்குள்பட்ட மதுரை தலைமையகம், திண்டுக்கல் 1- கிளை, தேனி கிளை, விருதுநகா் தலைமையகம், ஸ்ரீவில்லிபுத்தூா் கிளை ஆகிய 5 இடங்களில் ஏதேனும் ஓரிடத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும். கடவுச் சீட்டு வைத்திருப்பவா்கள் அதன் நகலை சமா்ப்பிக்க வேண்டும்.

தொடா்புடைய பகுதிகளில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொது சேவை மையங்களில் உரிய இணைய முகவரியில் வருகிற மாா்ச் 31- ஆம் தேதிக்குள்ளும் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.