நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா பதுக்கியவா் கைது

போடி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்க முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:41 pm

Din

போடி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்க முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா போலீஸாா் புகா் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, பொட்டல்களம் செட்டிகுளம் கண்மாய் கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், அமா்ந்திருந்தவரைப் பிடித்து சோதனையிட்டதில், விற்பனைக்காக அவா் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பொட்டல்களம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் சூா்யா (28) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சூா்யாவை கைது செய்தனா்.