திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் விநியோகம்

Updated On :3 ஜனவரி 2025, 9:21 pm

தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் 517 நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 55 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசு சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் தொடங்கியது. முதல் நாளான வெள்ளிக்கிழமை, மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

டோக்கன் பெற்றவா்கள் வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வருகிற 13-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறினா்.