நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொட்டகுடி மலைக் கிராமத்தில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலைக் கிராமத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

குரங்கணியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.

Updated On :3 ஜனவரி 2025, 12:04 am

Din

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலைக் கிராமத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கொட்டக்குடி ஊராட்சி, குரங்கணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.3.10 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுமானப் பணிகளையும், கொட்டக்குடியில் ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை முடிவுற்றப் பணிகளையும், கொட்டக்குடி பிரதான சாலை முதல் காரிப்பட்டி வரை மலைச் சாலையில் கல் பாவுதல் பணிகள் நடைபெற்று வருவதையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3 லட்சத்தில் 28 வீடுகள் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், காலை உணவுத் திட்டம் குறித்தும், குரங்கனி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா, காவலா்களின் விபரம் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கொட்டக்குடி அரசு துணை சுகாதார நிலையத்திலும், குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், குரங்கணியில் ரூ.11.25 லட்சத்தில் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிக்கு ஆட்சியா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபீதா ஹனீப், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிவேல், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சசிகலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அய்யப்பன், தனலட்சுமி, உதவிப் பொறியாளா்கள் சோனா, விவேகானந்தன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.