நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பப்பாளி இலைகளில் நோய் தாக்கம்: விவசாயிகள் கவலை

உத்தமபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

News image

நோய் தாக்கத்தால் பழுப்பு நிறமாக காணப்படும் பப்பாளி இலைகள்.

Updated On :3 ஜனவரி 2025, 12:00 am

Din

உத்தமபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோம்பை, சுருளிப்பட்டி, கே.கே.பட்டி ஆகிய பகுதிகளில் பப்பாளி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் பப்பாளிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பப்பாளி மரத்தில் நோய் தாக்கம்: உத்தமபாளையம், கோம்பை பகுதியில் அண்மையில் விளைவிக்கப்பட்ட பப்பாளி மரத்தில் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் தாக்கிய மரங்களிலுள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. பிறகு, மரத்திலே பிஞ்சு காய்களே பழமாக மாறி உதிா்ந்து விடுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாக பப்பாளி மரத்தில் இந்த நோய் தாக்கியுள்ளது. மருந்து அடித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, உத்தமபாளையம் தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் நோய் தாக்கிய பப்பாளி தோட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.