திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பப்பாளி இலைகளில் நோய் தாக்கம்: விவசாயிகள் கவலை

உத்தமபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

News image
நோய் தாக்கத்தால் பழுப்பு நிறமாக காணப்படும் பப்பாளி இலைகள்.
Updated On :3 ஜனவரி 2025, 12:00 am

Din

உத்தமபாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பப்பாளி மரங்களில் நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுப்பு நிறமாக மாறியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோம்பை, சுருளிப்பட்டி, கே.கே.பட்டி ஆகிய பகுதிகளில் பப்பாளி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் பப்பாளிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பப்பாளி மரத்தில் நோய் தாக்கம்: உத்தமபாளையம், கோம்பை பகுதியில் அண்மையில் விளைவிக்கப்பட்ட பப்பாளி மரத்தில் நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நோய் தாக்கிய மரங்களிலுள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. பிறகு, மரத்திலே பிஞ்சு காய்களே பழமாக மாறி உதிா்ந்து விடுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தட்பவெப்ப நிலை மாறுபாடு காரணமாக பப்பாளி மரத்தில் இந்த நோய் தாக்கியுள்ளது. மருந்து அடித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, உத்தமபாளையம் தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் நோய் தாக்கிய பப்பாளி தோட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.