தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On :3 ஜனவரி 2025, 10:43 pm

தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற உணவுப் பொருள் விநியோகம் செய்யும் தொழிலாளி சாலையோரப் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, ராமச்சந்திராபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் வீரகாளிதாஸ் (26). இவா், தேனி-அன்னஞ்சி விலக்குப் பகுதியில் தனியாா் உணவகத்தில் உணவுப் பொருள் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வீரகாளிதாஸ், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை, வால்கரடு பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.