தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டத்தில் 517 நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 55 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசு சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் தொடங்கியது. முதல் நாளான வெள்ளிக்கிழமை, மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
டோக்கன் பெற்றவா்கள் வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வருகிற 13-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

