வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் முருகன் (42). இவா், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 20.11.2023 அன்று கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்புச் செலவுக்கு நிவாரணமாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் அவரது பெயரில் வைப்புத் தொகையாக அரசு ரூ. ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.