கஞ்சா விற்றவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தேவதானபட்டி - முருகமலை சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நீதிராஜன் (40) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com