எஸ்ஐஆா் படிவத்தை திரும்பப் பெறும் விவகாரம்: ஆட்சியரிடம் அதிமுக மனு
தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை முன்னிட்டு, வாக்காளா்களுக்கு வழங்கப்படும் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மட்டுமே வாக்காளா்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என அதிமுக சாா்பில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.










