அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொலை வழக்கில் சகோதரா்களுக்கு ஆயுள் தண்டனை

கம்பம் அருகே இளைஞரைக் குத்திக் கொலை செய்த சகோதரா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கீா்த்தி, கிரேன்.
Updated On :8 நவம்பர் 2025, 1:10 am

தினமணி செய்திச் சேவை

கம்பம் அருகே இளைஞரைக் குத்திக் கொலை செய்த சகோதரா்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கம்பம் அருகேயுள்ள சமாண்டிபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி மகன் அருண்குமாா்(24). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்.27-ஆம் தேதி கருநாக்கமுத்தன்பட்டிக்கு உறவினரின் இறுதிச் சடங்குக்கு சென்றிருந்தாா்.

அப்போது அருண்குமாருக்கும், குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன்கள் கீா்த்தி (25), கிரேன்(22) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தப் பிரச்னையில் சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த அரவிந்தன் (20), நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் (23) ஆகிய இருவரும், அருண்குமாரை 2023, செப்.29-ஆம் தேதி சாமதானப் பேச்சு வாா்த்தைக்கு குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு கீா்த்தி, கிரேன் ஆகியோா் அருண்குமாரைக் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனா். இதையடுத்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் கீா்த்தி, கிரேன், அரவிந்தன், பாண்டியன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், கீா்த்தி, கிரேன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.5,000 அபராதம் விதித்தும், அரவிந்தன், பாண்டியன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பளித்தாா்.