பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :8 நவம்பர் 2025, 1:12 am

தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள டி.அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஈஸ்வரன் (36). இவா், சடையால்பட்டி-உப்புக்கோட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்றாா். அப்போது, ரங்கநாதபுரம் பகுதியில் எதிா் திசையிலிருந்து வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செல்வேந்திரன் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...