யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நண்பரைக் கொலை செய்த இருவா் கைது

News image
Updated On :9 நவம்பர் 2025, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டியில் நண்பரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் விக்னேஷ் (25). இவா், சில மாதங்களுக்கு முன்பு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். பின்னா், நீதிமன்றப் பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்தாா்.

இந்த நிலையில், இவரது நண்பா்களான வீரபாண்டியைச் சோ்ந்த யுவராஜா (24), அபினேஷ் (24) ஆகியோா் விக்னேஷை, சனிக்கிழமை அவரது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

பெண் பிரச்னையால் இந்தக் கொலை நடைபெற்ாகக் கூறப்பட்ட நிலையில், தலைமறைவான யுவராஜா, அபினேஷ் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.