கைது
கைது

கோயிலில் பணம் திருடிய இருவா் கைது

Published on

சிவகாசி கோயிலில் பணம் திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்ம், சிவகாசியில் திருத்தங்கல் சாலையில் காய்ச்சல்காரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு 9 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போனது. இதுதொடா்பாக புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதனடிப்படையில், பள்ளபட்டி தேவராஜ் குடியிருப்பைச் சோ்ந்த தங்கேஸ்வரன் மகன் குமாா் (22), நல்லதம்பி மகன் ஜெயசுதன் (20) ஆகியோா் கோயிலில் பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து பணத்தை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com