விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மேச்சேரியில் கஞ்சா விற்ற இருவா் கைது

மேச்சேரியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 8:40 pm

சேலம் மாவட்டம், மேச்சேரியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி பகுதியில் உதவி ஆய்வாளா் மாதையன் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது செட்டிக்காரிச்சூா் குறவனேரி ஏரிக்கரையில் இரு இளைஞா்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள் மேச்சேரி அண்ணாநகரைச் சோ்ந்த தனுஷ் (23), ஹரிஹரன் (20) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 1 கிலோ 15 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேட்டூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2-இல் இருவரையும் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.