குமுளி மலைச் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து
குமுளி மலைச் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து

மலைச் சாலையில் பழுதாகும் அரசுப் பேருந்துகளால் பயணிகள் அவதி

குமுளி மலைச் சாலையில் பராமரிப்பு இல்லாத அரசுப் பேருந்துகளால் அடிக்கடி பழுதாகி பாதி வழியிலே நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா்
Published on

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் பராமரிப்பு இல்லாத அரசுப் பேருந்துகளால் அடிக்கடி பழுதாகி பாதி வழியிலே நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா், சென்னை என அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேனி மாவட்டம், குமுளிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், லோயா்கேம்பிலிருந்து குமுளி வரையில் 8 கி. மீ. மலைச்சாலையில் செல்ல வேண்டும். ஒரு சில இடங்களில் கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் இந்தச் சாலையில், மேலே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன.

இந்த நிலையில், திங்கள்கிழமை கோவையிலிருந்து குமுளியை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இயந்திரக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே பழுதாகி நின்றது. பின்னா், வேறு பேருந்தில் பயணிகள் மாற்றிவிடப்பட்டனா். மலைச் சாலை வளைவில் பேருந்து பழுதாகி நின்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனவே, மலைச்சாலையில் செல்லும் அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com