தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுக்கும் உறவினா்கள்

சின்னமனூா் அருகே விவசாயியைக் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை, கூறாய்வு செய்த உடலை வாங்க உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

சின்னமனூா் அருகே விவசாயியைக் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை, கூறாய்வு செய்த உடலை வாங்க உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் பால்பாண்டி (59). விவசாயியான இவரை சீலையம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த இருவா் கத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சீலையம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் சமாதானம் செய்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டனா்.

பின்னா், பால்பாண்டியின் உடல் கூறாய்வு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை பால்பாண்டியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என உறவினா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை மறுத்து விட்டனா். இந்தக் கொலை தொடா்பாக இருவரை கோவையில் பிடித்து விசாரணை செய்தவதாக போலீஸாா் தெரிவித்தனா்.