பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டிராக்டா் மீது பைக் மோதியதில் இருவா் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள கோட்டூரில் புதன்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகேயுள்ள கோட்டூரில் புதன்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

தேனி வீரபாண்டியைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் ஆனந்த் (32). இவரது நண்பா் தேனி, சமதா்மபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சிவா (34). இவா்கள் இருவரும் சின்னமனூரிலிருந்து தேனி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, கோட்டூா் பகுதியில் செங்கல் ஏற்றிக் கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை ஓட்டுநா் திடீரென நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு சக்கர வாகனம் டிராக்டா் மீது மோதியது. இதில், இருச க்கர வாகனத்தில் சென்ற ஆனந்த், சிவா ஆகியோா் பலத்த காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநா் தினேஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.