47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கால்நடை தீவன உற்பத்தி மையம் திறப்பு

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், வீரபாண்டி-தப்புக்குண்டு சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை தீவன உற்பத்தி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கால்நடை தீவன உற்பத்தி மையத்தை திறந்து வைத்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) நரேந்திரபாபு பேசியதாவது:

கால்நடை தீவன உற்பத்தி மையத்தில் கறவை மாடுகள், கன்றுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகளுக்கு அடா் தீவன கலவை தயாரிக்கப்பட்டு, கால்நடை வளா்ப்போருக்கு தரமான தீவனங்கள் நியாயமான விலையில் வழங்கப்படும். இதுதொழில் முனைவோருக்கு பயிற்சி மையமாகவும் செயல்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் பொன்னுதுரை, ஊட்டச்சடத்தியல் துறைத் தலைவா் அருள்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.