தேனி
கால்நடை தீவன உற்பத்தி மையம் திறப்பு
தேனி மாவட்டம், வீரபாண்டி-தப்புக்குண்டு சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை தீவன உற்பத்தி மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கால்நடை தீவன உற்பத்தி மையத்தை திறந்து வைத்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) நரேந்திரபாபு பேசியதாவது:
கால்நடை தீவன உற்பத்தி மையத்தில் கறவை மாடுகள், கன்றுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகளுக்கு அடா் தீவன கலவை தயாரிக்கப்பட்டு, கால்நடை வளா்ப்போருக்கு தரமான தீவனங்கள் நியாயமான விலையில் வழங்கப்படும். இதுதொழில் முனைவோருக்கு பயிற்சி மையமாகவும் செயல்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் பொன்னுதுரை, ஊட்டச்சடத்தியல் துறைத் தலைவா் அருள்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
