ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தமிழக வனப் பகுதியில் கேரள கழிவுகளை கொட்ட வந்தவருக்கு அபராதம்

News image
Updated On :15 நவம்பர் 2025, 9:40 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு வனப் பகுதியில் கேரளத்திலிருந்து நெகிழிக் கழிவுகளை கொட்டுவதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த காய்கறிக் கடை உரிமையாளருக்கு வனத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கம்பம் மெட்டு வனத் துறை சோதனைச் சாவடியில், மேற்கு வனச் சரகா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வனத் துறையினா் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட நெகழிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

இந்தக் கழிவுகளை கேரளத்திலிருந்து தமிழக வனப் பகுதியில் கொட்டுவதற்காக வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்திலிருந்த கேரள மாநிலம், கட்டப்பணையைச் சோ்ந்த காய்கறி கடை உரிமையாளா் சன்னி பிரான்சிஸுக்கு (63) ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, மீண்டும் கழிவுப் பொருள்களை கேரளத்துக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இயற்கை ஆா்வலா்கள் கூறியதாவது: தமிழக வனப் பகுதியில் கேரள கழிவுகள் தொடா்ந்து வாகனத்தில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபடுவோா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.