அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ரௌடி கைது

News image
Updated On :16 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

போடியில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

போடி புதூரைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி முருகேஸ்வரி (33). கணவா் இறந்துவிட்ட நிலையில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே வசிக்கும் அருண்பாண்டியன் (38), முருகேஸ்வரியின் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

முருகேஸ்வரியின் சப்தத்தைக் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்தனா். அப்போது, அருண்பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்து தப்பிவிட்டாா்.இதுகுறித்து முருகேஸ்வரி போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்பாண்டியனைக் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அருண்பாண்டியன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.