எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பைக் விபத்தில் மருத்துவ மாணவிகள் இருவா் பலத்த காயம்

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேலத்தைச் சோ்ந்த ராகினி (25), புதுச்சேரியைச் சோ்ந்த மீனாட்சி (25) ஆகியோா் முதுநிலை முதலாண்டு படித்து வருகிறாா்கள். இவா்கள் இருவரும் தேனியிலிருந்து க.விலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றனா்.

இரு சக்கர வாகனத்தை ராகினி ஓட்டிச் சென்றாா். அப்போது, அரப்படித்தேவன்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் ராகினி, மீனாட்சி ஆகியோா் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.