அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுப் புட்டிகளை விற்ற இருவா் கைது

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:14 pm

Syndication

பெரியகுளம், போடி பகுதிகளில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்ற முதியவரையும் மூதாட்டியையும் போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தென்கரை திருவள்ளுவா் சிலை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா் தெற்குத் தெருவைச் சோ்ந்த சின்னகாளை (76) என்பதும், சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 7 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

போடி: இதே போல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது போடி முதல்வா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி (65), அவரது வீட்டில் மதுப் புட்டிகளை வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.