பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :19 பிப்ரவரி 2026, 7:17 pm

தேனி மாவட்டம், போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி சுற்றுவட்டராப் பகுதிகளில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி-மீனாட்சிபுரம் சாலையில் ஒத்தை புளியமரம் பகுதியில் சந்தேகத்துக் இடமளிக்கும் வகையில் நின்றிருந்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த இளங்கோவனை (49) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த பாண்டி (71) வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.