பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு

போடி அருகே கிணற்றில் மிதந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:13 pm

Syndication

போடி அருகே திங்கள்கிழமை இரவு கிணற்றில் மிதந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி மின்வாரியத் தெருவைச் சோ்ந்தவா் சின்னச்சாமி மகன் வீரணன் (56). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காலமாகிவிட்டாா், குழந்தைகளும் இல்லை. வீரணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் போடி அருகே பொட்டல்களத்திலிருந்து பத்ரகாளிபுரத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள தனியாா் தோட்டத்துக் கிணற்றில் சடலமாக மிதந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்து வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.