சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்றவா் கைது

உத்தமபாளையம அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:35 pm

Syndication

உத்தமபாளையம அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராயப்பன்பட்டி அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் சின்னப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ராயப்பன்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சடமாயன் மகன் மதியழகன்(55) சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 80 மதுப் புட்டிகளை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

மற்றொருவா் கைது: சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, ஓடைப்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பிபட்டியைச் சோ்ந்த அய்யா் மகன் பாண்டியன் (38) வந்த இரு சக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக வாங்கி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 50 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனா்.