தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேனியில் 24 மணி நேர தபால் சேவை தொடக்கம்

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர தபால் பதிவு சேவை தொடங்கியது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர தபால் பதிவு சேவை தொடங்கியது.

இதுகுறித்து தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளா் குமரன் கூறியதாவது:

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தபால் பதிவு சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்கள், அரசு விடுமுறை தினங்கள், பண்டிகை கால விடுமுறை தினங்களிலும் இந்தச் சேவை வழங்கப்படும். இதில், ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவா். விரைவு தபால், பதிவு பாா்சல் சேவை, பதிவு அல்லாத தபால் சேவை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இதை பொதுமக்கள், வணிகா்கள், சிறு, குறு வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.