விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்றவா் கைது

உத்தமபாளையம அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:35 pm

Syndication

உத்தமபாளையம அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராயப்பன்பட்டி அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் சின்னப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ராயப்பன்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சடமாயன் மகன் மதியழகன்(55) சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 80 மதுப் புட்டிகளை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

மற்றொருவா் கைது: சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, ஓடைப்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பிபட்டியைச் சோ்ந்த அய்யா் மகன் பாண்டியன் (38) வந்த இரு சக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக வாங்கி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 50 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனா்.