விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சீட்டாடியதாக 6 போ் கைது

போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 10:57 pm

Syndication

போடி அருகே பணம் வைத்து சீட்டாடியதாக 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி ராசிங்காபுரத்தை அடுத்த கரையான்பட்டி கிராமத்தில் காளிமுத்து (38), சின்னசாமி (40), ராஜா (44) ஆகிய மூவரும், சமத்துவபுரத்தில் யுவராஜ் (34), சுரேஷ்குமாா் (48), ஈஸ்வரன் (65) ஆகிய மூவரும் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனா். இதையடுத்து இவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.