கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேனியில் 24 மணி நேர தபால் சேவை தொடக்கம்

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர தபால் பதிவு சேவை தொடங்கியது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேர தபால் பதிவு சேவை தொடங்கியது.

இதுகுறித்து தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளா் குமரன் கூறியதாவது:

தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தபால் பதிவு சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரத்தின் அனைத்து நாள்கள், அரசு விடுமுறை தினங்கள், பண்டிகை கால விடுமுறை தினங்களிலும் இந்தச் சேவை வழங்கப்படும். இதில், ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவா். விரைவு தபால், பதிவு பாா்சல் சேவை, பதிவு அல்லாத தபால் சேவை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இதை பொதுமக்கள், வணிகா்கள், சிறு, குறு வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.