ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அதிமுக உரிமை மீட்புக் குழுவினா் மீது அதிமுகவினா் புகாா்

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:52 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டியதாக புகாரின் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

அதிமுக பொதுச் செயலா் பழனிசாமியின் புகைப்படத்தை அவதூறு பரப்பும் வகையில் சிலா் பெரியகுளம் தென்கரை பகுதியில் சுவரொட்டி ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுகவினா் அந்த சுவரொட்டியை அகற்றினா்.

இந்த நிலையில், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களான அதிமுக உரிமை மீட்புக் குழுவினா்தான் சுவரொட்டி ஓட்டியதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக நகரச் செயலா் பழனியப்பன் அளித்தப் புகாரின் பேரில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.