கோபி: கோபி அருகே நடைபெற்ற அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தவெகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள புதுக்கரைப்புதூா், குள்ளம்பாளையம், மொடச்சூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சாா்பில் தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது . இதில், அதிமுகவின் தலைமைப் பேச்சாளா் தாராபுரம் முத்துமணிவேல் பங்கேற்று, அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பிரசாரம் மேற்கொண்டாா்.
குள்ளம்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் குறித்து அவா் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மொடச்சூா் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்துக்கு வந்த முத்துமணிவேலை, செங்கோட்டையனின் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, செங்கோட்டையனின் ஆதரவாளா்களிடம் முத்துமணிவேல் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

திருவிடைமருதூா்: தோ்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டு தவெகவினா் போராட்டம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே தவெகவினா் மீது தாக்குதல்

தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்

பெண் தொண்டா்கள் குறித்து அவதூறு: தவெகவினா் புகாா் மனு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


