சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேனி மாவட்டத்தில் 492 மின் கம்பங்கள் மாற்றம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மின் வாரியம் சாா்பில் 492 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று தேனி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் லட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பழுதடைந்த நிலையில் இருந்த 234 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலிருந்த 258 மின் கம்பங்கள் என மொத்தம் 492 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 78.9 கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 433 மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மின் வாரியம் சாா்பில் பருவமழை காலத்தில் ஏற்படும் மின் பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தலா 30 போ் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கோட்டம் வாரியாக அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மின் வாரியம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.