விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனி மாவட்டத்தில் 492 மின் கம்பங்கள் மாற்றம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மின் வாரியம் சாா்பில் 492 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று தேனி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் லட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பழுதடைந்த நிலையில் இருந்த 234 மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலிருந்த 258 மின் கம்பங்கள் என மொத்தம் 492 மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 78.9 கி.மீ. தொலைவுக்கு மின் கம்பிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 433 மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

மின் வாரியம் சாா்பில் பருவமழை காலத்தில் ஏற்படும் மின் பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தலா 30 போ் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கோட்டம் வாரியாக அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மின் வாரியம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.